வெளிநாட்டில் இருந்து நாடுதிரும்பிய நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று குணமடைந்து வீடுதிரும்பிய இளைஞர் ஒருவருக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து சமூகத் தொற்று அபாயம் குறித்து அச்சம் எழுந்துள்ளது.
சிலாபம், ஆராச்சிகட்டுவ பிரதேசத்தில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்து வீடு திரும்பிய ஒருவருக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
23 வயதுடைய குறித்த நபர் கடந்த மாதம் 16 ஆம் திகதி டுபாயில் இருந்து இலங்கைக்கு திரும்பியிருந்த நிலையில், கொரோனா தொற்று உறுதிப்பட்ட காரணத்தால் வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவர் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் பரிசோதனைகளில் கொரோனா தொற்றில் இருந்து புரணமாக குணமடைந்துள்ளதை உறுதி செய்யப்பட்டு கடந்த 08 ஆம் திகதி வைத்தியசாலையில் இருந்து வீடு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.
வீடுதிரும்பிய போதிலும் அவரை 14 நாட்கள் வீட்டில் சுயதனிமைப்படுத்தலில் வைத்திருந்த போதே இவ்வாறு கொரோனா தொற்று மீண்டும் ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை